இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துன்பம்

இன்ப துன்பமென்று  எண்ணி இருப்பதெல்லாம் மனதின் மாயங்களே மனிதர்களே உணருங்கள் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் வருத்தமே மிஞ்சு மென்று உணர்கையில் துன்பமில்லை இருப்பினும் துன்ப விதை உனக்குள் நீ விதைக்கையிலே நானென்ன செய்வது நகைப்பதைத் தவிர நண்பனே சொல்கிறேன் கேள் துன்பமென்று உள்ளதெல்லாம் துச்சமாய் நீ எண்ணி துணிந்துநின்று நகைக்கையிலே தூரமாய்ப் போய் விடும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் சந்தேகம் இல்லையப்பா

நிலவுக் காதலி

முகிலேறி உனை நானும்  தொடலாகுமோ முகிலுந்தன் துகிலாக  உருமாறுமோ தடுமாறும் எனதுள்ளம்  தடையாகுமோ தடைதாண்டி இரு உள்ளம்  இடம் மாறுமோ சிறுமீண்கள் உனையண்டி  நகையாகுமோ இருள்கூட உனக்கான  சிகையாகுமோ ஆணெண்ணும் அகங்காரம்  அதிகாரமோ பெண்ணே உன் பேரழகு  பிடிமானமோ பெண்ணென்றால் நிலவென்று  சொலலாகுமோ நிலவே நீ பெண்ணென்றால்  தவறாகுமோ நமக்கென்று இருக்கின்ற  கடன் தீருமோ வருங்காலம் அதற்கான  தளமாகுமோ விடிகாலை நமக்கான  பிரிவாகுமோ அழுகின்ற நீர்த்துளி தான் பனியாகுமோ விடிவெள்ளி வானத்தில்  உருவாகுமோ மறுநாளில் மறுபடியும்  வரலாகுமோ இனிக்கின்ற இதழ் ரொம்ப  சுவையாகுமோ இனிப்பே உன் இதழில் தான்  உருவாகுமோ நிலவே நம் பெருங்காதல்  நிறைவேறுமோ இலையேல் என் கவி போல  கனவாகுமோ

நான்

ஆட்டம் போடுவேன் பாட்டு பாடுவேன் கூட்டம் கூட்டுவேன் கோட்டை தாண்டுவேன் நாட்டை வெல்லுவேன் கூட்டில் வாழுவேன் வேட்டை ஆடுவேன் கோட்டை ஆளுவேன் அன்பை அள்ளுவேன் பண்பை வெல்லுவேன் அம்பு கொண்டுநான் வம்பை வெல்லுவேன் துன்பம் கண்டுநான் இன்பம் கொள்ளுவேன் நண்பன் கொண்டுநான் அண்டம் வெல்லுவேன் தோல்வி கண்டு நான் வேள்வியாகின்றேன் கேள்வி கொண்டுநான் தோல்வி வெல்கிறேன் எண்ணம் கொண்டுநான் மண்ணை வெல்லுவேன் என்னை வென்று நான் விண்ணில் நில்லுவேன் எந்த ஊரிலும் பந்தம் கொள்ளுவேன் சொந்த ஊரிலே சொர்க்கம் கொள்ளுவேன் அகத்தூய்மையால் சுகம்  கொள்ளுவேன் சுகம் கொண்டுநான் அகம் வெல்லுவேன் சிறிய மனிதனின் குறையை போக்கி நான் பெரிய மனிதனாய் உயரச்செய்யுவேன் பெரிய மனிதரும் சிறிய மனிதராய் தெரியும் அளவு தான் பெரிய மனிதன் நான்

உழவு

எண்ணிப் பார்க்கையில் எத்தனை இன்பம் ஏற்றம் இறைத்து ஏர்கொண் டுழுது நாற்று நட்டு நடவு செய்து வாழ்ந்த வாழ்க்கையே வாழ்வின் இன்பம் ஒருவருக்கொருவர் துணையாய்  நின்று சிரித்துப் பேசி சிந்தனையின்றி கடுஞ் சுமையோடு நெடும் பகல் உழைத்துப் படுக்கப் போகையில் சகலமும் இன்பம் அத்தை மகனும் மாமன் மகளும் அன்பு கொண்டு அனுதினம் கூடி காதல் மொழிகள் பலப்பல பேசி கழித்த நாட்கள் காதலின் இன்பம் காளை மாடுகள் வண்டியில் பூட்டி விரட்டி விரட்டி வேகம் கூட்டி விண்ணில் பறந்து மகிழ்ந்த நாட்கள் திரும்பி வராமல் தீர்ந்த இன்பம் இத்தனை இன்பம் மொத்தமாய் தந்த ஒவியம் இன்பம் ஓவியம் தந்த ஒளியும் இன்பம் வாழ்வும் இன்பம் ஒவியம் ஒளியாய் மாறுதல் இன்பம்

பசி

பசித்தபின் புசியென்னும் மனிதர்களே கேளுங்கள் பசித்தாலும் புசிப்பதற்கு உணவெங்கே சொல்லுங்கள் ருசிகண்டு உணவருந்தும் மனிதர்களே சொல்லுங்கள் ருசியின்றிப் பசிவெல்லும் உணவிங்கே தாருங்கள் உணவெல்லாம் வீணாக்கும் மனிதர்களே நில்லுங்கள் ஒருவேளை உணவின்றி வாழ்பவரை காணுங்கள் இலக்கோடு வாழ்கின்ற மனிதர்களே கேளுங்கள் - எம் இலக்கெல்லாம் ஒருவேளை உணவேதான் பாருங்கள் பசியென்றால்  என்னவென உணர்ந்துகொள்ளப்  பாருங்கள் பசிவெல்லும் வழியேதும் இருந்தாலும் கூறுங்கள் உதவும் கரங்களிடம் எம்கதையை கேளுங்கள் இரவெல்லாம் உறங்காத எம்சோகம் பாருங்கள் உதவும் கரங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் உதவாமல் போனாலும் இகழாமல் பாருங்கள் உதவுகின்ற கரங்களே ஓர்நிமிடம் நில்லுங்கள் உயிர்காக்கும் உமக்காக விழியோரம் நீர்த்துளிகள்

வந்துவிடு வெண்ணிலவே

பட்டுவண்ண ஆடைகட்டி எட்டிநிற்கும் வட்டநிலா தொட்டுவிடத் துடிக்கின்றேன் கிட்டவந்து நில்லுநிலா பொட்டுவைத்து பூமுடித்து வித்தைகாட்டும் வெள்ளிநிலா விட்டுவிட்டு விலகிநிற்க விரும்பலாமோ சொல்லுநிலா கட்டிவைத்த தாரென்று சுட்டிவிடு சின்னநிலா கட்டவழிக்க நானிருக்கேன் கிட்டவந்து நில்லுநிலா ஊருக்குத் தெரியாமல்  வந்துவிடு வண்ணநிலா யாருக்கும் தெரியாமல் திரும்பிடலாம் சின்னநிலா

மழை

வான்முகில் வந்திட  மயில்கள் ஆடிட வான வீதியில்  மேக ஊர்வலம் கண்ணில் நீருடன்  என்ன காரணம் கடலில் நீரென  மேகப் பெண்ணுமே பூமிப் பந்துடன்   காதல் கொண்டது வான ராட்சசன்  கவர்ந்து போனதும் கண்ணில் நீரென  பூமி வந்தது பூமிப் பந்துடன்  இணைந்து போனது கடலில் நீரென  கரைந்து போனது மொத்த பூமியும்  குளிர்ந்து போனது

கவிதை

மொழியில்லா கவிதை ஓவியம் மொழியின் ஓவியம் கவிதை

பயணக் காதல்

இரவுப் பயணத்தில் இருவரும் தனித்தனியே கனவு கண்டோம் கனவினிலே காதல் கொண்டோம் அதைத் தாண்டி எதுவும் இயலாது என்றாலும் இரு ஜோடிக் கண்களிலே பல கோடி காதல் மொழி இருந்தாலும் இவையெல்லாம் உணர்ந்தும் உணராமல் பல ஜோடிக் கண்களுடன் பயணிகள் உறக்கம் உடற்பசி கொண்டு உறக்கம் தொலைத்து ஏங்கிக் கிடக்கும் நாங்களோ உங்களின் பார்வையில் புதுமணத் தம்பதி

உன்னோடு நான்

உன் விழிக்குளத்தில் நான் எனைத் தொலைத்தேன் நீ உருக்குலைத்து என்னை அலைக்கழித்தாய் உன் உதட்டசைவில் நான் உணர்விழந்தேன் நீ பதற்றமின்றி என்னை பருகிவிட்டாய் உன் கூந்தலுக்குள் நான் விரல் கொடுத்தேன் உன் கூச்சத்தினால் என்னை குளிர வைத்தாய் உன் பெண்மையின் மென்மையை அனுபவித்தேன் அதைக் கொண்டு நீ என்னை வென்று விட்டாய்

வீரம்

( ராணுவ வீரன் முன் பத்திரிக்கையாளன்) ஆயுதம் ஏந்துகின்ற வீரரையும் படம்பிடிக்கும் என் வீரம் ஒன்று தான் வரலாற்றில் இடம்பிடிக்கும் உன் வீரம் உயிரெடுத்தால் என் வீரம் அதைத்தடுக்கும் வரலாறு என்றைக்கும் எனக்குத் தான் மதிப்பளிக்கும் சுடுகின்ற உனக்குள்ளே எரிகின்ற நெருப்பு - அதை அனைக்கத் தான் படம் பிடித்தேன் அதுவே என் சிறப்பு உலகெங்கும் மனதுக்குள் மனிதம் மலர்ந்துவிட்டால் எல்லைகள் என்பதல்லாம் எடுபடாமல் போய்விடும்

கவிதை

எழுதிக் கொள் என்றது கவிதை - அது தன்னைத்தானே சொல்லச் சொல்ல எழுதுவது என் வேலை

விமர்சனம்

எனக்கு யார் மீதும் விமர்சனம் இல்லை என்னை யாரேனும் விமர்சித்தால் தவறில்லை என்னைப் பற்றி நினைப்பதை எல்லாம் காகிதத்தில் எழுதி கையொப்பமிடுங்கள் - பின் பெயரை மட்டும் மாற்றிடுங்கள் எனக்குப் பதில் உங்கள் பெயர் மீண்டும் படித்துப் பாருங்கள் இதுதான் உண்மை இதுதான் வாழ்க்கை என் வரிகளுக்குப் பின்னால் வலிகளும் வாழ்க்கையும் அதனால் தான் என்னால் எழுதவே முடிகிறது

தமிழும் தென்றலும்

செந்தமிழ் ஊரிலே தென்றலின் உலா கவிதைத் தெருவினை கடந்து போகையில் கற்பனைத் தோரணம் ஆயிரம் கண்டது எழுத்துக் கற்களால் கவிதை வீடுகள் கொத்தனார் வரிசையில் இவனும் ஒருவன் வசிப்பவர் எல்லாம் ரசிப்பவர் ஆயினும் தென்றலை யாரும் தீண்டவும் இல்லை - அதனால் தமிழுக்கும் கூட கர்வம் வந்தது முடிந்தால் என்னை வென்றிடு என்றது. தென்றலும் தொண்டையை சொருமிக் கொண்டு தமிழே  நீயும் ஓர் தென்றல் தான் என்றே முதல்வரி தமிழில் சொல்லி முடிக்கவும் தமிழும் தென்றலும் நகைத்துக் கொண்டன தென்றலும் தெருவின் அங்கம் ஆனது

உனக்கானவன்

கடுங்கோபம் கொண்டென்னை கடக்கலாம் அன்போடு என்னை நீ அனைக்கலாம் விட மாட்டேன் எனச் சொல்லி துரத்தலாம் இரவெல்லாம் கதை சொல்லி மிரட்டலாம் விரல்கொண்டு என்னை நீ மீட்டலாம் அகம் கொண்டு என்னை நீ பூட்டலாம் ஏனென்றால் பெண்ணே நான் உனக்கானவன்

வேடங்கள்

என்னை யாரென்று எண்ணிப்  பார்க்கிறேன் தாயாய் மகளாய் தாரமாய் தங்கையாய் தோழியாய் காதலியாய் மன்னிக்க முடியாத எதிரியாய் எத்தனையோ வேடங்கள். பெண்ணென பிறந்திடல் வரமா சாபமா எதுவும் தெரியாமல் எத்தனையோ எதிர்வினை ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படை பேதங்கள் உடலில் தான் என்றாலும் எதிர்கொள்ளும் பார்வையில் எத்தனை பேதங்கள் எனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தே பாதிப்பிறவி பயனற்றுப் போனது என்றேனும் ஒரு நாள் நான் இறந்து போனதும் மண்ணோடு மண்ணாய் மறைந்திடும் திறமைகள் நான் உயிரோடு இருக்கையில் கொன்றிடும் அனுதினம் ஆனாலும் உங்களுக்கு அதுவெல்லாம் தெரியாது சொல்வதற்கு உங்களிடம் எத்தனையோ குறைகள்

குணம்

பணத்தில் நாணயமும் குணத்தில் நா நயமும் கொண்டிடு மனிதா வென்றிடு உலகை

அன்பு

நீங்கள் யாராக இருந்தாலும் எனது கைகளை இறுக்கமாய் பற்றி கை நிறைய தாராளமாய் அள்ளிச் செல்லுங்கள் எனது அன்பை. வீட்டுக்குச் சென்றதும் உடனே கழுவுங்கள் கைகளை மட்டும். எனது அன்பு  அப்படியே இருக்கட்டும்

நீ

தொடர் வண்டி  பயணத்தில் தொடர்கின்ற  நினைவும் நீ சுடர்கின்ற  ஒளியும் நீ படர்கின்ற கொடியும் நீ இனிக்கின்ற சுவையும் நீ கனக்கின்ற கண்ணீர் நீ வரும் நாளில்  மறவாத வரலாற்றுப் புதையல் நீ

ரசனை

படம்
இன்று காலை முதலே எனக்குள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய நெடுநாளைய ஆசை நிறைவேறி இருக்கிறது. அருகிலிருந்த நகரத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றிராத நான் இன்றைக்கு சென்னையை அங்குலம் அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன். உயரமான கட்டிடங்கள், அகலமான சாலைகள், கூட்டமான பேருந்துகள் என எத்தனையோ விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தாலும், நான் அதிகம் ரசித்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான். அதுதான் இங்கே இருக்கும் பெண்கள்.  அழகழகாய், விதம் விதமாய், ரகம் ரகமாய்ப் பெண்கள். இவர்களைப் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும். ஆனால் எனக்கிருப்பதோ இரண்டு. இந்த இரண்டு கண்களை வைத்துக் கொண்டு கோடி கண்களின் வேலையைச் செய்வது சிரமம்தானே? ஆனால் நான் அதையும் சிறப்பாகச்செய்து கொண்டிருந்தேன். நான் இன்றைக்கு என் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிற எத்தனை பேரை மறுபடியும் பார்க்க முடியும்? அதனால், நான் பார்க்கிற ஒவ்வொரு பெண்ணையும் ஒரு நொடியில் ஸ்கேன் செய்து என்னுடைய இதயத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். பிறகு, சாவகாசமாய், ஒவ்வொன்றாய், அங்குலம் அங்குலமாய் அசை போட்டுக் கொள்ளலாம். நான் பார்ப்பது குறித்து எந்த...

மீண்டும் கவிஞன்

கவியெழுத  உறங்காத இரவுகள் பல  அன்று. இன்றும் உறங்காத இரவுகள் உண்டு கவி மட்டும் தான் இல்லை. நான் கவிஞனல்ல எனச் சொல்லி விலகினாலும் கவிஞனென என்னை  உலகம் சொல்லும். இன்றோ  அந்த நினைவுகள் தான்  என்னை கொல்லும். காலம் தான் என்னை கறை ஏற்றியது பாலன் என்னை  பைத்தியமாக்கி இதுதான் எனது விருப்பம் என்றது அறியா வயதில் புரியா காதல் அதனால் பயன் உளதா என்றது காதலித்து கவிதை எழுதும் நாட்டில் கவிதையை  காதலித்து எழுதினேன். அந்தக் காதலும் காலத்தில் கரைந்து போனது. நம்படா நானும் கவிஞன் என்றால் என்ன வம்படா என்றனை உலகம் பார்க்கும் மீண்டும் பிறப்பு  என்பதே முடிவு இறவா வரம் என்பதே விடிவு இறைவன் எனக்கொரு வரம் தனை தந்தால் குறையா வளத்துடன் நிறைவாய் கவிதை அருளும் வரத்தை தருவாய் என்பேன் அதுதான் எனது விதிதான் என்றால் புதிதாய் நானாரு விதிதான் செய்வேன். நாளும் கவிதை நானும் எழுதி வாணும் மண்ணும் கேளும் என்பேன். ஆணும் பெண்ணும் அருகில் நெருங்கும் காதல் என்னும் கவியும் தருவேன். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்திடும் குதிரை போல தான் என்னில் தோன்றிடும் கவிதை ஆர்வமாய் வந்து கேட்பவர் தன்னில் அமுதி...

கண்முன் இறைவன்

கண்முன் இறைவன் கனிவாய் வந்து என்னடா வரம் வேண்டும் என்றார் முதலில் நீதான் கடவுள் என்றால் அதிலே உண்மை உளதா என்றேன் அதற்கும் சாட்சி வேண்டும் என்றால் அதற்கொரு தேவை எனக்கி்லை என்றார் கோபம் கொண்டு கடவுள் போக வாரும் வரம்தனை தாரும் என்றேன் கேட்டால் தானே தரணும் என்று போட்டார் கடவுள் ஒரே போடு கடவுள் கூட முன்னே வந்தால் கடவுச் சொல்லால் அறியும் காலம் கடவுள் வருவார் வரம்தனை தருவார் என்றெனக்கு எப்படி தெரியும் அதனால் நானும் தலையை தடவ நாளை வரவா என்றவர் விணவ இன்றே கேட்பேன் என்றேன் நானும். அறிஞன் கவிஞன் புலவன் தலைவன் ஆகும் வரமது தந்திடு வென்றேன் எல்லாம் சரிதான் ஆனால் நீயும் மனிதன் தானா முதலில் என்று கடவுள் என்னிடம் கனலை காட்ட படைத்தவன் நீயே படைப்பிடம் வந்து அடுத்தவன் போல கேள்விகள் எதற்கு மனிதப் பிறவி கொடுத்து விட்டு மனிதனா எனும் கேள்வி் எதற்கு என்றே நானும் எம்பி குதித்திட பண்பாய் இறைவன் பதிலைத்தந்தார். நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கணக்கும் அனைத்து உண்மையும் என்பது தெரிந்தும் உணர்த்த வந்தவன் இறைவன் - அதை உணரத் துடித்தேன் இளையவன். உயிர்கள் தன்னை படைக்கும் பொழுது உயர்ந்த உயிரை படைக்க நினைத்தேன் என்னை போன்ற...

பெண்ணின் மனதைத் தொட்டு

 இரவு நேர இரயில் பயணம் தனக்கு எத்தகைய ஆபத்தினை ஏற்படுத்தும் என்பதை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. அவள் தீர்மானமாக இருந்தாள். தன்னைப் பற்றியோ, தான் மேற்கொண்டுள்ள பயணம் பற்றியோ வாய் திறக்கவில்லை. அவள் வீட்டில் உடுத்துகிற உடையுடன் வந்திருந்தாள். மாற்றுத் துணி மட்டுமல்ல, கையில் பணம் கூட ஒரு பைசா இல்லை. ஆனால் அவளது மனவுறுதி தான் அவளுக்கு என்னை அறிமுகப் படுத்தி இருக்கிறது. அவள் சென்னைக்குத் தான் செல்ல வேண்டுமென்று சொன்னதாலும் என்னுடன் வருவதற்கு உடன்பட வில்லை என்பதாலும் அவள் சென்னையில் யாரோ நம்பிக்கையானவர்களைத் தேடித்தான் பயணம் போகிறாள் என்பது தெரிந்தது.  அவளுக்கு நான் டிக்கெட் எடுத்துக் கொடுத்தேன். செலவுக்குப் பணம் கொடுத்தேன். இரண்டையும் அவள் மறுக்கவில்லை. ஆனால் ஒரு மனசாட்சியுள்ள மனிதனாக அவளுக்கு ரயில் டிக்கெட் வாங்கித் தருவதோடு மட்டும் என் கடமை முடிந்து விட்டது என இருந்து விட முடியவில்லை. ஒரு நம்பிக்கையான பயணத்துணையை அவளுக்குத் தேடித்தர நான் முனைந்த போது தான், அவளும் நானும் அவனைச் சந்தித்தோம். ******* வானத்தில் பறப்பது போல நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நான் உணர்ந்திருக...

விபரீத விளையாட்டு

 " ஏண்டா இந்த விபரீத விளையாட்டு " என்றான் அவன். "இதுல என்ன விபரீதம் " என்றேன். " நீ கதையெல்லாம் எழுதுனா யாரு படிக்கறது?" " யாரும் படிக்கனும்னு அவசியமில்ல" என்றேன். " அப்படின்னா ஆபத்தில்ல." " அப்படில்லாம் சொல்ல முடியாது. கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது."  " யாருக்கு?" " உனக்குத்தான். ஏனென்றால் நான் எழுதப் போவது உன் கதையை." " ஹா....... ஹா ...... என் கிட்ட என்ன கதை இருக்குது?" " காதல் கதை. கல்லூரிக் காதல்." அவன் சற்று யோசித்தான். இது கொஞ்சம் விபரீதம் தான் என உணர்ந்திருந்தான். "ஆமாம். உன் பெயரைப் போட்டே எழுதப் போகிறேன். உன் மனைவி படித்தால் அவ்வளவுதான் " " அவள் படிக்க மாட்டாள் " "ஏன்?" "அவளுக்கு படிக்கத் தெரியாது" " என்னடா சொல்ற?" " அவள் படிச்சது தெலுங்கு அதனால அவ படிக்க முடியாது" " நானே வந்து படிச்சு காட்டுவேன்" " ஏன் சுத்தி வளைச்சி கதையெல்லாம் எழுதி சொல்லனும்? நேர்ல வந்தே சொல்லிடேன்." "அதுல கொஞ்சம் சுவாரஸ்யம் க...

பொண்ணு யாரு சொல்லு மச்சான்

 பொண்ணு யாரு சொல்லு மச்சான் ஊருக்கு மறச்சு வெச்சு உனக்குள்ள  ஒளிச்சு வச்சு யாருக்கும் தெரியாம சித்திரமா எழுதி வச்சு மனசுக்குள் கோயில் கட்டி பத்திரமா வச்சிருக்கும் பொண்ணு யாரு சொல்லு மச்சான் பாவாடை சட்டையோடு படியாத  தலையோடு எண்ணயத்தான் காணாத இத்துனூண்டு தலைக்குள்ள உன்னையத்தான் வெச்சிருந்த பொண்ணு யாரு சொல்லு மச்சான் யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சி பாத்திருந்து ராவெல்லாம் தூங்காம காவலெல்லாம் காத்திருந்து பொத்தி வச்ச மயிலறக நீ வந்து கேட்டதுமே தந்துவிட்ட பொண்ணு யாரு சொல்லு மச்சான் காரணமே இல்லாம அடிக்கடி சிரிச்சு வெச்சு காத தூரம் போனதுமே திரும்பி உன்ன பாக்க வெச்ச பொண்ணு யாரு சொல்லு மச்சான் வாய்க்கா வரப்பெல்லாம் உங்க கத சொல்லுதிங்க புங்க மர நிழலுங்கூட தெரிஞ்சிருக்கும் அந்த கத புத்தி கெட்ட  சிறுக்கி இவ கேக்குறப்ப சொல்லு மச்சான் யாருக்கோ வாக்கப்பட்டு எங்கேயோ உள்ள அவ ஊருக்கே   தெரிஞ்சு உன்ன கைப் பிடிச்ச என்ன விட எப்படித் தான் உசத்தியின்னு இப்ப நீயும் சொல்லு மச்சான் புத்தி கெட்ட சிறுக்கி இவ பேச்சுல தான் தப்பிருந்தா புரிஞ்சிகிட்ட புருசன் நீ பக்குவமா சொல்லு மச்சான் உன்...